July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குழு சிக்கியது

யாழ்.-கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (11) இரவு 10.15 மணியளவில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் 985,000 ரூபா பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து நகைகளை வழங்கிய மேலும் மூன்று சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் நகைககளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, குறித்த சந்தேக நபர்களிடம் இருந்த எஞ்சிய நகைகள் அடகு வைக்கப்பட்ட இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 25, 33, 35 மற்றும் 41 ஆகிய வயதை கொண்டவர்கள் எனவும், கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் (12) யாழ்.மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.