சிலாபம் சேதவத்த பிரதேசத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சிலாபம் நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலாபம் நகரசபைத் தலைவருடன் இன்னொருவரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.