July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’: இலங்கைக்கான ஐநா பிரதிநிதி

அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

ஹனா சிங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அப்பால் செல்லக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றகூடல்களை தடை செய்துள்ளார்.

குறித்த தடைகளைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் ஏனைய உரிமைகள் கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களால் மீறப்படக் கூடாது என்று ஐநா வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.