July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு திகதி குறித்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில், இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையே முரண்பாடுகள் நிலவுகின்றதா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரில் நம்பிக்கை இழக்கவில்லை என்று செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.