July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்!

இலங்கையில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகளுக்காக முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த உள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும் அதிகமான மாணவர்கள் தமக்கான பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாததால் பரீட்சையை பிற்போடுமாறு கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.