May 31, 2025 18:51:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மர்மமான முறையில் மரணம்

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் இராமாவில் பகுதியில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காணியில், மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த  சிவகுமார் கஜேன் (28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் இன்று (11)மீட்கப்பட்டுள்ளதால் மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.