May 28, 2025 2:47:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டு.வாழைச்சேனையில் போதைப் பொருட்களுடன் ஐவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஒரு கிலோ 850 கிராம் கஞ்சா மற்றும் 202 கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மட்டக்களப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம், போதைப் பொருட்களை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவர் உட்பட 5 பேரை நேற்றைய தினம் (10) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வியாபாரத்துக்காக மன்னார் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சாவை மீட்டதுடன், கஞ்சா வியாபாரியை கைது செய்தனர்.

அதேவேளை, வாழைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், 202 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.