June 12, 2025 5:39:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் இருந்து 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தன

சீனாவில் இருந்து மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன.

சீனாவில் இருந்து இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கையின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் டோஸ்கள் வீதம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

குருநாகல், கொழும்பு மாவட்டங்களுக்கு 2 இலட்சம் டோஸ்களும், களுத்துறை மாவட்டத்துக்கு 3 இலட்சம் டோஸ்களும் கம்பஹா மாவட்டத்துக்கு 5 இலட்சம் டோஸ்களும் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும், 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.