July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்கள் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் 2,894 குடும்பங்களை சேர்ந்த 11,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பலத்த மழை மற்றும் மண் சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் 76 வயது நபர் ஒருவரும் கடுவெல பகுதியில் வசிக்கும் 55 வயது நபர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா, கண்டி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் சிரற்ற காலநிலை காரணமாக அதிகம் பதிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களில் 327 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில், 63 குடுப்பங்களை சேர்ந்த 280 பேர் பதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் நுவரெலியா மாவட்டத்தில் 200 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியும் காலி மாவட்டத்தில் 198 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.