June 12, 2025 11:20:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் 5,957 ஆசிரியர், அதிபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

யாழ்.மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 5,957 ஆசிரியர்கள்,அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் பொது மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப் பெற்ற 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகளில் வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளில் 7,266 பேர் தமக்கான முதலாவது டோஸை பெற்றுக் கொண்டனர். கடந்த ஐந்து நாட்களில் 45,722 பேர் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களில் 5,957 பேருக்கு வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது. இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 வீதம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.