July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிணையில் விடுதலையானவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப முயற்சித்ததால் குழப்பம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டவர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட 31 பேர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தலா 25 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிணையில் விடுதலையாகி, வெளியே வந்தவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுசெல்ல பொலிஸார் முயற்சித்த போது, கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் சட்டவிரோதமாக சிவில் செயற்பாட்டாளர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியதாகவும், சுகாதார மருத்துவ அதிகாரிகள் அவ்விடத்துக்கு வரவில்லை என்றும் இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.