July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உட்பட 31 பேர் கைது!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றம் முன்னிலை சோசலிச கட்சி ஆகியன ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பௌத்த தேரர்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை அடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளை வெளிக் கொண்டுவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் உரிமையை அரசாங்கம் அடக்க முற்படுவதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.