
பிரதான நீர்விநியோக கட்டமைப்பில் திருத்த வேலைகள் காரணமாக ஜுலை 10 ஆம் திகதி கொழும்பில் 21 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி 10 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 ஆம் திகதி காலை 6 மணி வரையில், கொழும்பு 1, 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் கொழும்பு 4 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்திலேயே நீர்விநியோகம் இடம்பெறும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இதனால் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.