May 28, 2025 23:00:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீர்மானங்களை எடுக்கக் கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு!

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது.

கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று மாலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்குள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரால் பங்காளிக் கட்சிகள் சில ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தின் போது அந்த விடயம் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.