June 17, 2025 15:31:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர் ஸ்தானிகர் ஆலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கக் கிடைத்ததை மகிழ்ச்சியாகக் கருதுவதாக உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் போன்ற விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டுள்ளனர்.