
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, தனது பதவிக் காலத்தில் அமெரிக்க தூதுவர் வழங்கிய இராஜதந்திர ஒத்துழைப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.