July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை அதிகரிக்க யோசனை

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 10,000 ரூபாவில் இருந்து 12,500 ரூபா வரையில் அதிகரிக்கும் வகையில் ஊழியர்களுக்கான சம்பள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் இன்று நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்பொழுது காணப்படும் ஆகக் குறைந்த சம்பளத் தொகையை 2,500 ரூபாவால் அதிகரிப்பதற்கும் மற்றும் ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிக்கவும் 2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனச்சட்டத்தின் 03வது சரத்தை திருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கோ அல்லது கட்டுப்பாடுகளுக்கோ உட்படாது என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் சட்டமா அதிபர் சட்டரீதியான சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பித்து நிறைவேற்றுவது தொடர்பிலும் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.