பாராளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட, தனது பதவியை இராஜினாமா செய்தை தொடர்ந்து வெற்றிடமான ஆசனத்திற்கு பஸில் ராஜபக்ஷவின் பெயரை பரிந்துரைத்து அந்தக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அறிவித்திருந்தது.
இதன்படி இன்றைய தினம் அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
பஸில் ராஜபக்ஷ நாளைய தினத்தில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் பஸில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.