July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவிலிருந்து குணமடைந்த வயோதிப தாயை வைத்தியசாலைக்கே திருப்பி அனுப்பிய குடும்பம்!

(File photo : Facebook /Lionie Lonton)

இலங்கையில், கொரோனா தொற்றுலிருந்து குணமடைந்த வயோதிப தாய் ஒருவர் தமது குடுபத்தினரால் மீண்டும் வைத்தியசாலைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பென்தொட்டை குணசேகர நினைவு வைத்திய சாலையில் குறித்த தாய் கொவிட் பிரிவில் கடந்த 14 நாட்கள் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் அவர் பூரண குணமடைந்ததன் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது குடும்பத்தினர் அவரை வீட்டில் சேர்த்துக் கொள்ள மறுத்துள்ளனர்.

இதனால் குறித்த தாய் கொவிட் ஆபத்துக்கு மத்தியில் சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையை தொடர்பு கொண்டு வினவியதையடுத்து குறித்த தாய் தொடர்பில் பொலிஸாருக்கும் கிராம  சேவையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஊடாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகளாவிய பெரும் தொற்றுக்கு மத்தியில் இவ்வாறான மனித நேயமற்றவர்களின் நடவடிக்கைகள் சமூகத்தில் மேலும் கவலையை அதிகரித்துள்ளன.