October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் மணல் கொள்ளையர்களின் தாக்குதலில் பொலிஸ் அதிரடி படையினர் நால்வர் படுகாயம்

யாழ்.,அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் நான்கு பொலிஸ் படையினர் காயமடைந்துள்ளனர்.

மேலும், அதிரடி படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் கொள்ளையில் சிலர் ஈடுபடுவதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸ் விசேட படையினர் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்ய முற்படுகையில் கொள்ளையர்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படும் உபகரணங்களால்  தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பொலிஸார் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருவதுடன், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.