June 11, 2025 9:04:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் முடக்கம்!

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் மூன்று மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நாரந்தனை கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட கிராமசேவகர் பிரிவின் மலபட வத்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.