July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்?: சுகாதார பணிப்பாளர் பதில்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையால் கடந்த இரண்டு மாதங்களாக பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவற்றை மீளத் திறப்பது குறித்து கல்வி அமைச்சு சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர், இதுவரையில் இவற்றை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக அலுவலக பணியாளர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தும் வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் இதன்பின்னர் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.