July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக ஊடக பதிவுகளுக்காக கைது செய்யப்படுவதை தடுக்க ரணில் விக்கிரமசிங்க முன்மொழிவு!

இலங்கையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்காக மக்களை கைது செய்வதை தடுக்கும் வகையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

சனிக்கிழமையன்று ஐ.நா. தலைமையிலான இளைஞர் குழுவான “பராபுரா” ஏற்பாடு செய்த ஒரு இணையவழி கலந்துரையாடலில் இலங்கை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ஒரு நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே அவரை பயங்கரவாத தடுப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்காக மக்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், உச்சநீதிமன்றங்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை முன்மொழியலாம்.அவை குறித்த பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டுவர முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.