
யாழ்.-அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதற்கு அங்குள்ள பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச சபைபின் ஆளுகைக்குட்பட்ட காரைமுனங்கு மயானத்தில் பிரதேச சபையினால் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேநேரம், நல்லூர் பிரதேச சபையினால் மயானங்களை அழகுபடுத்துவதாக கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்குள்ள பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு மயானங்களில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு பிரதேச சபை அமர்வுகளில் அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த இடத்திற்கு வருகை தந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.