June 12, 2025 17:25:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸிலின் பாராளுமன்ற பிரவேசம் குறித்து நாமலின் நிலைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது தொடர்பில் இதுவரையில் பஸில் ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் கலந்துரையாடவில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜுலை 8 ஆம் திகதி பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதுடன், 9 ஆம் திகதி பொருளாதார அமைச்சராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அது குறித்து ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திற்கு வர வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாகவும் ஆனால் அதுகுறித்து அவர் இதுவரையில் அரசாங்கத்துடன் கதைக்கவில்லை என்றும் நாமல் ராஜபக்‌ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பஸில் ராஜபக்‌ஷ வருவாராக இருந்தால், அது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பலமாக இருக்கும் என்றே கருதுவதாக கூறியுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, அவருக்காக தமது ஆசனத்தை வழங்குவதற்கு பலர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.