June 16, 2025 11:15:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தலில் இருந்து சில பிரதேசங்கள் விடுவிப்பு

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பிரதேசமொன்று இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாகரதெனிய வத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை முதல் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக வஸ்கடுவ வடக்கு பிரதேசம், மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியக்கல்லாறு 2, 3 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் கொத்தமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.