July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் முடிவு

தாதியர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இணங்கியுள்ளமைக்கு அதிருப்தி வெளியிட்டு திங்கள் கிழமை (05) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச சேவைக்கான ஐக்கிய செவிலியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (02) இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த முடிவானது பிற இணைந்த தொழிற்சங்கங்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

“ரூ .20,000 வருடாந்திர சீருடை கொடுப்பனவு, பதவி உயர்வு வழங்குவதற்கான வழிமுறையை மீண்டும் நிலைநிறுத்துதல் போன்ற கோரிக்கைகள் பிற இணைந்த தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் வழங்கப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

இதையடுத்து மருத்துவம், பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் பிற இணைந்த தொழிற்சங்கங்கள் நேற்று இரவு முதல் கடமைகளிலிருந்து விலகியுள்ளன.

திங்கட்கிழமை (05) முதல் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.