![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/Ranjan-1.jpg?fit=502%2C290&ssl=1)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சட்ட ரீதியிலான முறைகளின் கீழும் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமையவும் அவருக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு அந்தக் கடிதத்தின் ஊடாக கரு ஜயசூரிய ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை பொதுமக்களிடம் இருந்து வரும் கோரிக்கையாக கருதுமாறு கேட்டுக்கொண்டுள்ள கருஜயசூரிய, பொது மன்னிப்பு விடயத்தில் மற்றையவர்களுக்காக உருகும் ஜனாதிபதியின் இதயம் ரஞ்சன் ராமநாயக்கவுக்காகவும் உருகட்டும் என்று பிரார்த்திப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.