June 14, 2025 18:06:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாள்கள் மீட்பு

வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட நான்கு வாள்கள் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், தாவடி- தோட்டவெளியில் குறித்த வாள்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களைத் தேடிச் சென்றபோதே இந்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.