July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டு மக்களை மரணத்தின் விளிம்புக்கு கொண்டுசெல்ல வேண்டாம்’: எதிர்க்கட்சி

இலங்கை மக்களை மரணத்தின் விளிம்புக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் விவசாய உரம் தொடர்பான தீர்மானம், இலங்கை எதிர்காலத்தில் பஞ்சத்தை எதிர்நோக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு நேரத்துக்கு உரம் கிடைக்காத போது விவசாய உற்பத்தி குறைவடைவதாகவும், விவசாய உற்பத்திகள் குறைவடையும் போது, நாட்டில் உணவுப் பாதுகாப்பு மோசமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உணவு நிலை மோசமடைந்தால் உணவை இறக்குமதி செய்வோம் என அரசாங்கம் கூறினாலும், உணவு இறக்குமதிக்கும் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலால் நாட்டில் பஞ்சமும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

படிப்படியாக சேதன இயற்கை உரத்தை நோக்கி செல்ல முடியுமான ஒரு திட்டத்தை உருவாக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.