July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.அல்லைப்பிட்டியில் பிறந்த நாள் கொண்டாடிய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்த நாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்,ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.