July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 37 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர் மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜுலை முதலாம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த ஒருவர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 30 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 8 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 28 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,157 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,883பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 60,972 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 28,311பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று மேலும் 1,701 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229,541ஆக உயர்வடைந்துள்ளது.