July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

38 பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்த பஸ் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பஸ் ஒன்று பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இன்று (01) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த பஸ்ஸை பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த பஸ்ஸில் 38 பயணிகள் இருந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், குறித்த பஸ்ஸில் கொண்டு வரப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.