July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் போர் விமானங்களை தரமுயர்த்த இஸ்ரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையின் போர் விமான மேம்பாட்டு திட்டத்துக்கு இஸ்ரேலிய விமான தொழிற்துறை நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் 5 கபீர் போர் விமானங்களை தரமுயர்த்துவதற்காக 49 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

போர் விமானங்களின் குண்டு வீச்சு திறனை மேம்படுத்தும் திட்டத்துக்கு கடந்த 2020 டிசம்பரில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய விமான தொழிற்துறை நிபுணர்கள் மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், திறன் மேம்படுத்தல் பணிகள் நிறைவடைய இரண்டு வருட காலம் எடுக்கும் என்றும் விமானப் படை தெரிவித்துள்ளது.

ஒரு புதிய போர் விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்ய 40 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் நிலையில், 49 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 5 போர் விமானங்கள் தரமுயர்த்தப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் குறித்த போர் விமானங்களை மேலும் 15 வருடங்கள் வரை பயன்படுத்த முடியுமான நிலை ஏற்படுவதாகவும் விமானப் படை சுட்டிக்காட்டியுள்ளது.