July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் சில பிரதேசங்கள் முடக்கம்!

File Photo

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காரைநகரின் கலவந்தால்வு பகுதி மற்றும் ஊர்காவற்துறையின் கள்ளித் தெரு பகுதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் சுதுகம்பளை மேற்கு கிராம சேவகர் பிரிவின் வெலமெத பாரகம பகுதி மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, டன்சின் கிராம சேவகர் பிரிவின் மத்திய பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.