June 13, 2025 4:06:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை வான் வெளியை இராணுவ பயிற்சிக்காக கோரவில்லை; இந்தியா

(Photo : airforce)

இலங்கை வான் வெளியை மூன்றாம் நாடொன்றுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்தியா கோரவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை வான் வெளியில்  இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் மறுத்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

“மூன்றாம் நாடு ஒன்றுடன் எந்தவொரு கூட்டுப் பயிற்சியின் நோக்கத்திற்காகவும் சமீப காலங்களில் இலங்கை வான் வெளியைப் பயன்படுத்த இந்தியா எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.