July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஷானி அபேசேகர பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகர, இம்மாதம் 16 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருக்கும் போது மேற்கொண்ட புலனாய்வுகளுக்காக பழிவாங்கப்படலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக ஷானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தனக்கு பாதுகாப்பு அளிப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.