July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு இந்தியா 120 மில்லியன் பெறுமதியான கடற்படை இயந்திரங்கள் அன்பளிப்பு

இலங்கைக்கு இந்தியா 120 மில்லியன் ரூபா பெறுமதியான கடற்படை உதிரிப்பாகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் ஒரு அம்சமாகவே, இந்த இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் கெவ்மன் ஏகநாயகவிடம் இந்திய துணைத் தூதுவர் வினோத் ஜெகொப் உதவிப் பொருட்களைக் கையளித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய சுரக்சா கப்பலின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கெவ்மன் ஏகநாயக தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக இந்திய துணைத் தூதுவர் வினோத் ஜெகொப் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.