![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/gee.jpg?fit=666%2C431&ssl=1)
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபா பெறுமதியான 1500 கிலோ நெய் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஒட்ஸ் மற்றும் பூஜைப் பொருட்கள் என்ற பெயரில் இந்தியாவின் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கப்பலின் ஊடாக கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்தே இந்த நெய் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீபம் எண்ணெய் என்ற பெயரிடப்பட்டிருந்த டின்களுக்குள் சூட்சுமமான முறையில் நெய்யை மறைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 13 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு 13 ஐ சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.