June 14, 2025 8:04:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி ஆரம்பம்; முதல் நாளில் 9 ஆயிரத்து 988 பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

யாழ்.மாவட்டத்தில் திங்கட்கிழமை (28) ஆரம்பமான கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கையில் 9 ஆயிரத்து 988 பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ்.மாவட்டத்திற்கு கடந்த மே மாத இறுதியில் கிடைக்கப்பெற்றன.இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற பொது மக்களுக்கு இரண்டாவது டோஸை வழங்கும் பணி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வரை இரண்டாவது டோஸ் வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.