July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 41 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இலங்கையில் நேற்று (27) கொரோனாவால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த இருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 30 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 12 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 33 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,985 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று (28) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,867 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 253,618 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 29,425 பேர் நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று (28) மேலும் 2,251 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 221,249 ஆக உயர்வடைந்துள்ளது.