July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை இராணுவத்தையும் இராணுவ சீருடையையும் வெறுப்பவரே ரணில்’: சரத் பொன்சேகா சாடல்

இலங்கையின் இராணுவத்தையும் இராணுவ சீருடையையும் வெறுப்பவரே ரணில் விக்ரமசிங்க என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வந்தார், இப்போது பசில் ராஜபக்‌ஷ வரத் தயாராகிறார், நீங்கள் வரவேற்கத் தயாரா என ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையும் தற்போதைய நடத்தையும் கடந்த காலத்தைவிட மாறுபட்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் எவரேனும் இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தால், அவர்களுக்கு தேசிய உணர்வு இல்லை என்றும் அதுவே ரணிலின் பிரச்சினை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்தினரைத் தாக்கிப் பேசியே, அவரது பாராளுமன்ற ஆரம்ப உரையை நிகழ்த்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசில் ராஜபக்‌ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பலமான உறுப்பினர் என்றும் அதுதொடர்பாக தீர்மானிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் பொன்சேகா பதிலளித்துள்ளார்.