July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேஸ்புக் பதிவுக்காக ஆணி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

பேஸ்புக்கில் நபர் ஒருவரை அவதூறுக்கு உட்படுத்தி பதிவிட்டதாக தெரிவித்து, இருவரை கடத்திச் சென்று அவர்களை பலகையில் வைத்து ஆணி அடித்து சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் பலகொல்ல பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

பேஸ்புக் பதிவு தொடர்பில் குறித்த இருவரையும் அம்பிட்டிய பகுதிக்கு கடத்திச் சென்றுள்ள சிலர், அவர்களை சிலுவைப்போன்ற பலகைகளில் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரோருவர் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பிட்டிருந்ததுடன், இதனுடன் மேலும் சிலர் தொடர்புப்பட்டுள்ளமையையும் தெரியவந்தது.

இதன்படி விசாரணைகளை நடத்திய பொலிஸார், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரையும், மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 10 சந்தேக நபர்களை தேடி தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.