July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசாங்கத்திடம் இருந்து எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை”

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்‌ஷ பதவியேற்றதும் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு, அந்த செய்திகளை மறுத்துள்ளது.

அமைச்சுப் பதவியையோ அல்லது வேறு ஏதேனும் பதவியையோ தனக்கு வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரவில்லை என்றும், அவ்வாறான பதவிகளை பெற்றுக்கொள்வதற்கான எதிர்பார்ப்புகளும் அவரிடம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.