June 13, 2025 16:32:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம்: வாகனங்களுக்கும் தீ வைப்பு!

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அந்த வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை அங்கிருந்த காரொன்று தீயில் முற்றாக எரிந்துள்ளதாகவும், மேலும் ஒரு வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.