July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 30 வயதுக்கும் குறைந்த ஒருவர் உட்பட மேலும் 39 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று (26) கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த ஒருவரும், 30 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 03 பெண்களும் 9 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உயிரிழந்த மிகுதி 27 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,944 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று (27) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,825 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 251,751 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 29,848 பேர் நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று (27) மேலும் 2,158 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 218,998 ஆக உயர்வடைந்துள்ளது.