July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சங்கிலியால் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்கையில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

(File Photo)

இலங்கை நவகமுவ ரனால பிரதேசத்தில் களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் இன்று (26) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாகவும் தலையில் இரண்டு துப்பாக்கி  தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்வெல்ல எம்புல்கம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

குறித்த நபர், தமது இரகசிய காதலியுடன் வாடகை வீட்டில் ஒரு வருட காலம் வசித்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எனினும் இவர் ஹல்துமுல்லை பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.