July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று (25) கொரோனாவால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 18 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,905 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று (26) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,876 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 249,926 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 30,224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று (26) மேலும் 2,172 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 216,840 ஆக உயர்வடைந்துள்ளது.