![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/covid-2.jpg?fit=800%2C494&ssl=1)
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அடுத்த 8 முதல் 10 வாரங்களில் டெல்டா கொரோனா வைரஸ் வகை நாட்டில் தீவிரம் அடையக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சரியான சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அடுத்த எட்டு வாரங்களில் நாடு ஒரு தீவிரமான நிலைமையை எதிர் கொள்ளும் என டெல்டா வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.