July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் ஆரம்ப கட்ட நஷ்டஈடாக 720 மில்லியன் ரூபாய் வழங்க இணக்கம்

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் ஆரம்ப கட்ட நஷ்டஈடாக 720 மில்லியன் ரூபாய் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை, சட்டமா அதிபரின் ஊடாக ஆரம்ப கட்ட நஷ்டஈராக 40 மில்லியன் அமெரிக்க டொலர் கேட்டிருந்த நிலையில், 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க எக்ஸ்- பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு இந்தத் தொகை பங்கிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களின் நஷ்டஈடு கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து, 720 மில்லியன் ரூபாயைப் பங்கிட்டுக் கொடுக்க அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.